70 அமெரிக்கர்களை காப்பாற்றிய இந்திய வீரர்

70 அமெரிக்கர்களை காப்பாற்றிய இந்திய வீரர்

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் புகுந்த ஓமர் மதீன் (29) என்ற ஐ.எஸ். பயங்கரவாதி 49 பேரை சுட்டுக்கொன்றான். இந்த தாக்குதலில் 53 பேர் காயம் அடைந்தனர். ஆனால் இந்த தாக்குதலின் போது கேளிக்கை விடுதிக்குள் சிக்கிய 70 பேரின் உயிரை வாலிபர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வாலிபரின் பெயர் இம்ரான் யூசுப் (24). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கடற்படை முன்னாள் வீரர். இம்ரான் யூசுப்பின் குடும்பம் 4 தலைமுறைக்கு முன்பே இந்தியாவில் இருந்து கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். இவர் துப்பாக்கி சூடு நடந்த விடுதியில் காவலாளியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று வெளியே இவர் பணியில் இருந்தார். அப்போது விடுதிக்குள் 4 முறைக்கு மேல் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை அறிந்த அவர் உள்ளே சென்றுள்ளார். அங்கு அலறி அடித்தபடி அங்கு மிங்கும் ஓடி உள்ளனர்.

உடனே அங்கு சென்ற யூசுப், அங்குள்ள பின்புற கதவை திறந்து விட்டுள்ளார். பின்னர் ஒருவர் பின் ஒருவராக 70 பேரை வெளியேற்றி அவர்களின் உயிரை காப்பாற்றி உள்ளார். யூசுப் மட்டும் அன்று இல்லையென்றால் உயிரிழப்புகள் 100-ஐ தாண்டியிருக்கும. தனது உயிரை பணயம் வைத்து வீரத்துடன் சாதுர்யமாக செயல்பட்ட இம்ரான் யூசுப்பை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News