தாய் ஒருவர் தனது 7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, அவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் 26 வயதான பெண்ணொருவரும் அவரது 7 மாத ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் தாயின் சடலத்தையும், குழந்தையின் சடலத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
இந்நிலையில் அட்டன் நீதிவான் முன்னிலையில் மரண விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.