யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை செட்டியார் தெரு வீதியிலிருந்து மட்டக்களப்பு செங்கலடி எல்லை வீதியிலுள்ள தமது உறவினர் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு குறித்த குடும்பத்தினர் காரில் புறப்பட்டுள்ளனர்.
அதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியின் தூக்கத்தால் சடுதியான வாகன தடுப்பை செலுத்தியதால் சனநடமாட்டம் குறைந்த இவ்விடத்தில் வாகனம் நிலைகுழைந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை அவ்வீதியில் வந்துகொண்டிருந்த இன்னுமொரு பேருந்தில் விபத்தில் காயமடைந்த குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு செங்கடி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும் குறித்த விபத்தில் சிறுமி சுவர்த்தினி (7) என்பவர்கள் காயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவாதகவும் தெரிவித்துள்ளனர்.