மும்பையில் 65 வயது முதியவர் ஒருவர் டேட்டிங் தளத்தின் மூலம் 45 லட்சம் பணத்தினை இழந்தது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
65 வயதான குறித்த நபர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஆன்லைனில் தனது நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கையில் Looking for date? என்ற கேள்வி வந்துள்ளது.
இதற்கு, ஆம் என்று பதில் அளித்து டேட்டிங் தளம் ஒன்றிற்குள் சென்றுள்ளார். அங்கு தனது விவரங்களை பதிவு செய்த பின்னர், மீரா என்ற பெண்ணிடம் இருந்து போன் கால் வந்துள்ளது.
அந்த பெண்ணிடம் பேசிய இவர், ஒரு வருடத்திற்கு ஒரு பெண் என்ற கணக்கில் ரூ .10 லட்சம் பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.
இந்த 10 லட்சம் பணம் போதாது என்று தொடர்ந்து சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ளார். இப்படி 30 லட்சம் வாங்கிய பின்னர், ஒரு நம்பர் ஒன்றை முதியவரிடம் கொடுத்த மீரா டேட்டிங் செல்வதற்கான திகதியையும் ஒப்பந்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.
ஆனால், இந்த 30 லட்சம் பணத்தினையும் தொடர்ந்து சிறிது சிறிதாக மீணம் பணம் கேட்டுள்ளார். இப்படி மொத்தமாக 46.25 லட்சம் பணத்தினை கொடுத்துள்ளார்.
நாளடைவில் மீரா அந்த முதியவரின் அழைப்பை ஏற்கவில்லை. அதன்பின்னர் தான், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது அந்த முதியவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதனை தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தால் அவமானம் என கருதி சொல்லாமல் இருந்துள்ளார்.
இறுதியில் வேறு வழியில்லாமல் தனது குடும்பத்தினரின் உதவியுடன் பொலிசில் சென்று புகார் அளித்துள்ளதையடுத்து போலியான டேட்டிங் இணையதளம் மற்றும் அப்பெண் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

