கடந்த 2018ல் கலகலப்பு-2 என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த கேத்தரின்தெரசா இந்த வருடம் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் என படம் மூலம் ஆரம்பத்திலேயே தனது ஆட்டத்தை துவக்கிவிட்டார். தற்போது கைவசம் தமிழில் இரண்டு, மலையாளம் தெலுங்கு ஆகியவற்றில் தலா ஒரு படம் வைத்துள்ளார்.
இந்தநிலையில் கேத்தரின் தெரசா அடுத்ததாக தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் இட்டாரமயிலதோ, சரோனைடு, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் இணைந்து நடித்த கேத்தரின்தெரசா, இது அல்லு அர்ஜுனுடன் கூட்டணி சேரும் நான்காவது படமாகும். இந்த படத்தை இந்த படத்தை பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்குகிறார்