கடந்த ஏப்றல் 23 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக அக்குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.