ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் நிறைவேற்றுக் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு (19) இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பிலுமுள்ள பொறுப்புக்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.