கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கைகள் நாளை (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயற்குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை ஏறத்தாழ 200 பக்கங்களைக் கொண்டதாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் ஊடாக அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரிகள் சிலருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடக செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென்றும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக இந்த விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்க முடியாது. நீதிமன்றத்துக்கே இதற்கான அதிகாரம் உள்ளது. எங்கு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன, எவ்விடத்தில் பலவீனம் காணப்படுகின்றது என்பதையே பாராளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.