ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் இதுவரையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவற்றில் அரச சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் பாவித்தல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முகநூல் கணக்கினூடாகவும், 0112558572 என்ற தொலைநகலுடகவும், 011 2558570/71 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.