Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

15 வருடங்களின் பிறகு நிரபராதி என விடுதலையான தமிழ் அரசியல் கைதி

May 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
15 வருடங்களின் பிறகு நிரபராதி என விடுதலையான தமிழ் அரசியல் கைதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியின் போது, அவர் மீதான கொலை முயற்சி வழக்கில் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொறியியலாளரான சிவலிங்கம் ஆருரனை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அரச இலக்கிய விருது பெற்ற அரசியல் கைதியான இவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தினை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு – கொள்ளுபிட்டி பித்தலைசந்தியி பகுதியில் அப்போதைய பாதுகாப்பு செயளாளரான கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் பாதுகாப்பு செயளாளரான கோட்டாபய ராஜபக்ச, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரசசொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2012ஆம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

உண்மை விளம்பல் விசாரணை

இந்த குற்றச்சாட்டுப் பத்திரத்தில், கைதியான சிவலிங்கம் ஆருரன் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் பொலிஸ் அத்தியட்சகருக்கு சுயவிருப்பத்தில் வழங்கியதாக கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அரச தரப்பின் பிரதான சான்றாக முன்வைக்கப்பட்டு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது அரச தரப்பின் பிரதான சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக எதிரியினால் வழங்கப்படவில்லை என்ற ஆட்சேபனை எதிரி சார்பில் முன்வைக்கப்பட்டதை அடுத்து உண்மை விளம்பல் விசாரணை நடைபெற்றது.

உண்மை விளம்பல் விசாரணையில் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிசார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தினை பெற்றுக் கொண்டனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் எதிரி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து, அரச தரப்பின் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நிராகரிப்பதாக கட்டளை வழங்கினார்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிப்பதாக நீதிமன்றம் கட்டளை வழங்கியதையடுத்து எதிரிதரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இந்த அரசியல் கைதி 15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்தக் கைதிக்கு எதிராக வழக்கை மேலும் தொடர்ந்தும் நடாத்த வேறு அரச சாட்சியங்கள் இல்லையாயின் கைதியை விடுதலை செய்யும்படி தனது சமர்ப்பணத்தில் வேண்டிக் கொண்டார்.

இதனையடுத்து, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகிய பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய வேறு சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சிவலிங்கம் ஆருரனை விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் அரச தரப்பில்க பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய முன்னிலையாகியதுடன் எதிரி சார்பில் சட்டத்தரணிகளான தர்மராஜா, தர்சிகா தர்மராசா ஆகியோரின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜரானார்.

Previous Post

ரோஹன சவால் கிண்ண கால்பந்தாட்டம் : இஸிபத்தன முழு ஆதிக்கம்

Next Post

விரைவில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

Next Post
க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

விரைவில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures