நெல்லை அருகே பள்ளி ஆண்டு விழாவில் சக்தி வாய்ந்த மின் விளக்கு பயன்படுத்தப்பட்டதால் மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
நெல்லை ஏர்வாடியில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா நடை பெற்றது. அப்போது விழா அலங்காரத்திற்காக சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் விழா முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் நெல்லையில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹாலஜன் விளக்கில் வாயு கசிவு காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.