பிரம்மாண்ட படமான பாகுபலியில் நடித்த பின், ‛சாஹோ’வில் நடித்து முடித்திருக்கிறார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் ஒப்பந்தமாகி இருந்தார். தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.
சாஹோ படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை ஸ்ரத்தா கபூர், அங்கே இரண்டு கோடி ரூபாயை ஒரு படத்துக்கான சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால், சாஹோ படத்தில் ரூ.7 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல, படத்தின் விற்பனையில் இத்தனை சதவீதம் தனக்கு பங்கு என்ற ரீதியில் சம்பளம் பேசியிருந்த நடிகர் பிரபாஸுக்கு நூறு கோடி ரூபாய் வரை, பங்குத் தொகை கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.