ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் ‘ஸ்டைல்’ வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி அணிக்காக களமிறங்கினார் ரிஷாப் பன்ட், 20. லீக் சுற்றில் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 684 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 173.60) எடுத்தார். இதையடுத்து இத்தொடரின் வளர்ந்து வரும் வீரர்களில் சிறந்தவர் என்ற விருதை பெற்றார். தவிர ‘ஸ்டைல்’ வீரராகவும் பன்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ், 66, கூறுகையில்,‘‘ கிரிக்கெட்டின் புதிய அதிரடி வீரராக உருவெடுத்துள்ளார் ரிஷாப் பன்ட். அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் எடுத்து உதவினார்,’’ என்றார்.