இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.
ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் ஞாயிற்றுக்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து செயல்பட்டுக் கொண்ட நிலையில் நான் வெளிநாடு சென்ற நிலையில் எனக்கு தொடர்ச்சியாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சுமார் 6 மாதகாலம் கட்சி வேலைகள் தொடர்ந்து செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது இந்த இடைவெளி ஏற்பட்டது இருந்த போதும் கட்சி வேலைத்திட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு சென்றுள்ளது.
இருந்தபோதும் எங்களின் நிகழ்ச்சி நிரலில் இந்த தமிழரசு கட்சி கிழக்கு மண்ணில் இருந்து விரட்டியடிப்பதில் எந்தவிதமான மாற்று கருத்துக்கும் இடம் இல்லை சிலருக்கு இது ஏளனமாக இருக்கும் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.
கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் நடைபெற்று வரும் பல சட்டவிரோத செயற்பாடுகள் அதற்கான காரணங்களையும் மிக விரைவில் இந்த அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்பதுடன் அந்த குற்றத்தை செய்த குற்ற வாளிகளுக்கான தண்டனையை வழங்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதே நேரத்தில் இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காது இருப்பதற்கான ஒரு நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி மறைந்த முன்னாள் தலைவர் இரா.சம்மந்தனுக்கு உருவ சிலை அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றது என்பதை அறிந்துள்ளேன். எனவே அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது.
இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது. அவ்வாறு பொது இடத்தில் அமைக்கும் பட்சத்தில் நாங்கள் எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன் அதனை அகற்றுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்வோம்.
அதேவேளை இது வன்முறை மிரட்டல் அச்சுறுத்தல் என சொல்வதற்கு முன்னரே இதனை நாங்கள் அறிவிக்கின்றோம். இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.












