Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல

December 10, 2018
in News, Politics, World
0

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென எடுத்த முடிவு அல்லவென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி.நேற்று (09) தெரிவித்தார். இந்த விவகாரமாக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் நேற்று கொட்டகலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொழிலாளர்களும் சில தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிச்சயமாகப் போராட்டத்தில் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளதென்றும் கொட்டகலை சீ.எல்.எப் அலுவலகத் தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் என்ற குறிக்கோளிலிருந்து இ.தொ.கா மாறுப்படப் போவதில்லை. மாறாக எம்மிடம் கடைசியாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், மேலதிக கொடுப்பனவுகள் இணைந்ததாக 925 ரூபாய் என்ற அடிப்படைக்கும் வந்தார்கள்.

இந்தத் தொகை தொழிலாளர்களுக்குப் போதுமான தொகையாக இல்லை. இதை அனைவரும் உணர்வார்கள். ஆகையினால், மேலும் எமது ஆயிரம் ரூபாய் இலக்கை நோக்கிய பயணத்திற்காக அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த பணிபகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 6 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் வேறு எந்த பிரச்சினைகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், கடந்த முறை ஒன்றரை வருடங்களாக அதாவது 18 மாதங்கள் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதன்போது வழங்கப்பட வேண்டிய நிலுவைப் பணம் அதிகம் என்பதனால் இதனை வழங்க மறுத்தனர். ஒக்டோபர் 26ஆம் திகதி ஒரு பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டு குழப்ப நிலை உருவாகியதால் அன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

இருந்த போதிலும் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவு எல்லைக்கு வராததன் காரணமாகப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் இந்த வேளையில், நாளை (இன்று) கொழும்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.,

இன்று தோட்டத் தொழிலில் ஈடுபடும் ஆண் தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களுக்குப் பணிக்கு ச் செல்வது தோட்டங்களில் குறைவான ஊதியம் கிடைப்பதனாலே. ஊதிய உயர்வை வழங்கும் பொழுது இவர்களும் தோட்ட தொழில்களில் தொடர்ந்தும் ஈடுப்பட்டு தோட்டங்களைப் பலமாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

மக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு

Next Post

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்

Next Post

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures