கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல்ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, இ.அங்கயன் மற்றும் சந்திரகுமார், தவராசா ஆகியோர் ஆளுநர் சகிதம் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகப் பாதிப்படைந்த மக்களின் நிலமைகள் தொடர்பில் அரசு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் கவனம் செலுத்திவரும் நிலையில் நேற்று குறித்த அரசியல்வாதிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
காலையில் கிளிநொச்சியிலும் மாலையில் முல்லைத்தீவுக்கும் பயணம் செய்து அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டனர். மாவட்டங்களின் நிலவரம் தொடர்பிலும் மாவட்டச் செயலர்களிடம் கேட்டறிந்துகொண்டனர்.
இதேநேரம் வன்னியில் ஏற்பட்ட வெள்ள இடர் சற்றுக் குறைந்துள்ளது. குறிப்பிட்டளவு மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புகின்றபோதும் கிராமங்களைச் சூழ்ந்துள்ள வெள்ளம் முற்றாக வற்றவில்லை. கடும் குளிருடன் கூடிய காலநிலையே நீடிக்கின்றது.
சில நாள்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர்.

