நெதர்லாந்து நாட்டுப் பிரஜைகள் இருவரின் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், பெறுந்தொகைப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பலவும் மடவளயைச் சேர்ந்த ஒருவரல் கண்டெடுக்கப்பட்டு உரமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மடவளை வங்குவக்கடையைச் சேர்ந்த எஸ்.எம். ரிஸ்மி என்பவர் ஒரு பணப்பையை கண்டெடுத்துள்ளார். அதில் நெதர்லாந்து நாட்டுப் பிரஜைகள் இருவரின் பணம், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் காணப்பட்டன.
குறித் நபர்களை தொடர்புகொண்டு அவற்றை ஒப்படைக்கும் நோக்கில் முயற்சித்தவருக்கு இலங்கையில் அவர்களை தொடர்பு கொள்ள வேறுஎவ்வித தகவலும் கிடைக்கவில்லை, இறுதியில் அதில் இருந்த ஒரு பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட மாத்தளையில் உள்ள ஒரு சுற்றுளா விடுதியை தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பில் விசாரித்த போதும் எதுவித தொடர்பு கொள்வதற்கான தகவல் அங்கும் கிடைக்கவில்லை.
பதிலாக அவர்களின் ஆச்சர்யமும் பாராட்டுமே கிடைத்தன காரணம் இவ்வாறு அவர்கள் இதற்கு முன்னர் யாரும் உதவ முன் வந்மைதொடர்பில் அறிந்திருக்கவில்லை.
எனினும் தனது தொடர்பிலக்கங்களை கொடுத்து குறித் நெதர்லாந்து பிரஜைகள் தொடர்பு கொண்டால் வழங்குவதற்கும் தான் ஆயத்தமாய் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினரால் தொடர்பு கொள்ளப்பட்ட எஸ்.எம் ரிஸ்மி குறித்த சுற்றுலா பிரயாணிகள் தொடர்பில் கூறி இவரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு வருமாறு வேண்டிக் கொண்டமைக்கு அமைய அங்கு சென்று குறித்த சுற்றுலா பயணிகளை சந்தித்து பணப்பையை ஒப்படைத்தார்.
இச் செயலானது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை ஆச்சர்யப்பட வைத்ததுடன் அதற்காக இவரை பாராட்டவும் செய்தனர். தமது சேவைக்காலத்தில் இவ்வாறான ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் கூறினர்.