இலக்கத் தகடுகள் துணியால் மூடிக்கட்டி மறைக்கப்பட்ட நிலையில் கொக்குவிலில் நேற்றுமுன்தினம் உந்துருளி மீட்கப்பட்டிருந்தது. உந்துருளியின் உரிமையாளர் கோப்பாயில் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடு மற்றும் வண்ணார்பண்ணை கிராம அலுவலர் பணிமனை என்பனவற்றின் மீது நேற்று முன்தினம் பகல் வாள்களுடன் வந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. தாக்குதலாளிகள் இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட உந்துருளியிலேயே வந்திருந்தனர்.
இந்தச் சம்பவங்களின் பின்னர் கொக்குவில் பகுதியிலிருந்து இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட உந்துருளி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது. உந்துருளியின் இலக்கத் தகட்டு இலக்கத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை முன்னெடுத்தனர். உந்துருளி வவுனியாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.கோப்பாயைச் சேர்ந்தவரின் பெயரிலேயே உந்துருளி பதிவு செய்யப்பட்டுள்ளது. உந்துருளியின் உரிமையாளரான கோப்பாயைச் சேர்ந்தவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்தார்கள்.