வியட்நாமில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ள தங்கப் பாலம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டநாங் அருகில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பானா மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் 150 மீட்டர் நீளத்தை கொண்டதாகும்.
கான்கிரீட் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரம்மாண்ட கரங்கள் இந்த பாலத்தை தாங்குவது போன்று அமைந்துள்ள தோற்றம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த பாலத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடவுளின் கரங்களில் பாதுகாப்பாக இருப்பதை போன்ற உணர்வு இந்த தங்க நிற பாலத்தை கடக்கும்போது ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.