பிரான்சில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட இணைய வசதிகள் அடங்கிய சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்ளெட்ஸ், ஸ்மார்ட் வாட்சஸ் ஆகியவற்றை உபயோகிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இன்றைய நாட்களில் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பல்வேறு தரப்பினர் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் பிரான்சில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஆசிரியர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது மாணவர்களுக்கு தடை உத்தரவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் என கூறியுள்ள அதிகாரிகள், இது போன்ற நடவடிக்கைள் பாடத்திட்டத்தின் அடிப்படை என்றும் கூறியுள்ளனர்.முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் கார் ஓட்டுபவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிக்க தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.