ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் சட்டத்துறைச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் சட்ட திட்டங்களை மீறியுள்ளதாக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.