வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 6 பேருக்கு நோய்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய் காவி காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 11 சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலும் காணப்பட்ட உணவகங்களில் கடமையாற்றும் உணவு கையாளும் உழியர்கள் 382 பேருக்கு இவ்வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் வரை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உணவங்களில் கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், இம் மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கு நெருப்பு காய்ச்சலை பரப்பக்கூடிய நோய்க்காவி காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், 3 பேருக்கு காச நோயை ஏற்படுத்தும் நோய் காவி இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மீண்டும் அதே உணவகங்களில் கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

