இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும் கிருஸ்ண பகவானின் ஆசி வேண்டியும் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் காலை 10 மணியளவில் சுதர்சன யாகம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இன்று காலை 6 மணியளவில் பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் ஆலயத்திலிருந்து 108 பால் குட பவனி வல்புர ஆழ்வார் ஆலயத்திற்கு மந்திகை ஊடாக பால் கொண்டு வந்து இவ் மகா சுதர்சன் யாகம் வரல்லிபுர ஆழ்வாரில் இடம்பெற்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை மீட்பதற்கான வேண்டுதல் பால் குட பவனியும் மகா சுதர்சன யாகமும் ஆழ்வார் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .