பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் மறுவிற்பனையில் இங்கிலாந்தை சேர்ந்த வயாகோகோ நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து பிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரசிகர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கவும், அதிகாரப்பூர்வமற்ற டிக்கெட் மறுவிற்பனையை தடுக்கும் வகையிலும் வயாகோகோ நிறுவனம் மீது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகர நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. வயாகோகோ நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. fifa.com/tickets என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்களை ஆன்லைனில் வாங்குமாறு ரசிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.