வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் சில தரப்பினர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பலந்தொட்ட ரிதியகமவில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்பொழுது நாமல் ராஜபக்ஸ எம்.பி. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஹம்பாந்தோட்ட மக்களுக்கு இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்க எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், ஹம்பாந்தோட்டைக்கு இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்து பெற்ற பணத்துக்கு என்ன நடந்தது என்பது கூட இதுவரை யாருக்கும் தெரியவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.