Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன?

May 23, 2017
in News
0
வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன?

சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத் தொடங்கியது 2016 தொடக்கமே.

மகிந்த அணியினர் இழந்த தம் அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காக உச்சகட்ட அளவு பிரச்சாரங்களை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் எதுவெனில் தெற்கில் ஆட்சிக் கவிழ்ப்பும், இனவாதமும் தலைதூக்கும் அதே சமயம் வடக்கில் வேறு வகையில் ஓர் பிரச்சினை ஆரம்பமாகின்றது.

உதாரணமாக இந்த இனவாதம் சென்றவருடம் தமிழர்களுக்கு எதிராகவே பாரிய அளவில் வெளிப்பட்டது. முஸ்லிம் மக்கள் மீது இனவாதம் பரப்பப்பட்டாலும் அதன் தாக்கம் தமிழர்களையும் உள்ளடக்கியே வெளிப்பட்டது.

என்றாலும் தற்போது தமிழர்களை கைவிட்டு விட்டு முஸ்லிம் மக்கள் மீது இனவாதப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த இடத்தில் தமிழர்கள் இன்னொரு வகையில் முடக்கப்படுகின்றார்கள்.

கடந்த வருடத்தில் தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமும், ஆட்சிக் கவிழ்ப்பும் சூடு பிடிக்கும் தருணம் வடக்கில் பொலிஸார் மீது வாள் வெட்டும், பாதுகாப்பு பிரச்சினைகளும் தலைதூக்கின.

இந்த இடத்தில் தெற்கில் இனவாதம் அடக்கி வைக்கப்பட வடக்கிலும் அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் (உண்மையான) குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படவோ, தண்டிப்புகளோ இடம்பெறவில்லை.

அதேபோன்று தற்போதும் தெற்கில் இனவாதம் காரணமாக பிரச்சினைகள் தலைதூக்கும் அதே சமயம், யாழில் பொலிஸார் வாகனம் மீது தாக்குதலும், வடக்கில் மிகையான இராணுவக் குவிப்பும் இடம் பெறுகின்றது.

இந்த இடத்தில் இதற்கு காரணம் எதுவென அறியாத போதும் வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டு மீண்டும் ஓர் யுத்த நிலை ஏற்பட்ட தோற்றத்தினை ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை வேடிக்கையானதே.

இதே சமயம் தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பாரிய பிரச்சினையாக வெளிப்பட்டு, கலவரங்கள் ஏற்படும் சாத்தியக்கூறினை ஏற்படுத்திக் கொண்டு வரப்படுகின்றது.

இதன் விளைவாக பள்ளிவாசல்கள் மீது தாக்குதலும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும் ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல் சம்பவங்களும் இடம் பெறுகின்றது.

அத்தோடு சிங்கள இளைஞர்களையும் திரட்டும் பணி வேகமாக தொடரப்படுவதோடு, சமூக வலைத்தளங்களில் இனவாதம் பகிரங்கமாகவே தொடருகின்றது.

அது மட்டுமல்லாது பிரச்சினைகள் ஆரம்பிக்கப்படும் முன்பாக, “பௌத்தம் அழிந்து விட்டது, இது பௌத்தர்களுக்கு பாரிய அழிவினை ஏற்படுத்திவிடும், இது பௌத்த நாடு..,

ஆனால் சிங்கள இளைஞர்கள் இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்க வேண்டும், கலவரங்களிலோ, தாக்குதல்களிலோ ஈடுபடவேண்டாம்” என அழுத்திக் கூறப்பட்டு கொண்டு வரும் நிலை தெற்கில் தொடருகின்றது.

என்றபோதும் இதன் உள்ளர்த்தம் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதலே என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

இதேவேளை வடக்கில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என ஆட்சியாளர்கள் கூறும் அதே சமயம் காரணம் இன்றி பொலிஸாரும், இராணுவமும் குவிக்கப்பட்டு கொண்டே வருகின்றது.

ஆனால் குற்றவாளிகள் எவரும் அடையாளப்படுத்தப்படவும் இல்லை என்பது வேடிக்கையானது. இதன் காரணமாக வடக்கில் தழிழர்கள் ஒருவிதமாகவும், நாட்டில் முஸ்லிம்கள் ஒருவிதமாகவும் அடக்கப்பட்டு கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.

ஆனால் இதன் மூலம் கிடைக்கப்பெறும் பதில் எவ்வாறு அமையப்போகின்றது என்பதற்கு மட்டும் இப்போதைக்கு வெளிப்படையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.

இவை இவ்வாறு இருக்க உச்ச கட்டத்தில் இருந்த ஆட்சிக் கவிழ்ப்பு பிரச்சாரங்கள் அப்படியே அடங்கிப் போய் விட்டது.

ஆனாலும் இனவாதமும் சரி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகளும் சரி ஆட்சி மீதான குற்றச்சாட்டை மட்டுமே முன்வைத்து வருகின்றது.

அதனால் இவையும் பௌத்தம் ஊடாக ஆட்சிக் கவிழ்ப்பிற்கான செயற்பாடுகளே என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் அரசு இந்த விடயங்கள் அனைத்தையும் வெறும் மேற்பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது மற்றொரு பக்கம் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

இவை அனைத்தையும் நோக்கும் போது இனவாதம், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான விமர்சனங்கள் அனைத்துமே அரசியல் உள்நோக்கங்களுக்காக நடத்தப்பட்டு வரும் நாடகங்களாகவே நோக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரே கல்லில் இரண்டு அல்ல கொத்தாகவே மாங்காய்களை வீழ்த்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் இவற்றால் கிடைக்கப்போகும் பதில் இலங்கை பின்னோக்கிப் பயணிப்பதா?

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொள்ளும் அரசு, உண்மையில் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்து விட்டது.

தீர்வுகளுக்கான இழுத்தடிப்புகளும் இப்போதும் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அத்தோடு புது அரசியல் யாப்பு வருகின்றது.., வருகின்றது எனக் கூறும் அரசு அதனை இழுத்தடிக்கும் செயற்பாடாகவே நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆக இவை அனைத்தும் அரசும் இணைந்து நடத்தும் ஓர் நாடகம் என்றே தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

மரணப்படை எங்கே? கோத்தாவிற்கு விரிக்கப்படும் இரகசிய வலை!

Next Post

வித்தியா படுகொலை பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு?

Next Post

வித்தியா படுகொலை பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures