வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதற்காக வவுனியாவில் பௌத்த தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகவும், வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது வவுனியாவில் நடத்தப்படவுள்ள பௌத்த மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் வடக்கில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும், பௌத்த மதத் தலைவர்கள், அநாவசியமான பௌத்த ஊடுறுவல்கள் ஏற்படுவதற்கு எதிராக உறுதியுடன் செயற்படுவதாகவும் ஆளுநர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
எனவே எதிர்வரும் காலங்களில் குறித்த ஊடுருவல் இருக்கும் என்றால் இவர்களுடன் இனைந்து கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வை பெறவே இந்த மாநாடு வவுனியாவில் இடம்பெறுகின்றது என கூறினார்.