ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மகிந்த அணியுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்ற அமைச்சர் வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐ.தே.கவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் தான் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.