Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டனில் பலாத்கார குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் சிறையில்

August 18, 2016
in News, World
0
லண்டனில் பலாத்கார குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் சிறையில்

லண்டனில் பலாத்கார குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் சிறையில்

பிரிட்டனில் தங்குவதற்கான அனுமதியை மேற்கு தொகுதி லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியம் மூலம் பெற்ற இலங்கை தமிழ் இளைஞர் சிவராஜா சுகந்தன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் தற்போது பிரிட்டன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் தொடர்பில் தெரியவருவதாவது,

இவர் 1999 ஆம் ஆண்டு தன் 14 வயதில் பிரித்தானியாவிற்கு சென்றார். 2003 ஆம் ஆண்டு அவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அவரின் மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்தும் பிரிட்டன் அகதிகள் முகாம்களில் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் இவரை நாடு கடத்த தீர்மானித்திருந்தனர்.

ஆனால் இவரை நாடு கடத்துவதற்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

சிவராஜா சுகந்தன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்தல் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழ் மக்கள் 800 பேர் மனுவினை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

குறித்த பிரச்சினை தொடர்பில் அச்சமயம் சுகந்தனிற்கு அடைக்கலம் வழங்குவதற்கு வில்லியம்ஸ் குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீனிடம் ஆதரவு கோரியிருந்தார். இதே சமயம் பிரிஸ்டலிலும் உள்ள மக்கள் சுகந்தனை நாடு கடத்துவதற்கு எதிராக 2010 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறான தாக்கங்கள் காரணமாகவும், சுகந்தன் இரண்டு குழந்தைகளின் தந்தை என்ற அடிப்படையில் அவருக்கு 2011 இல் பிணை வழங்கப்பட்டது.

சிவராஜா சுகந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு முக்கிய காரணம் வில்லியம்ஸ் என அகதிகள் மைய முகாமையாளர் கெரோலின் பீட்டி (Caroline Beatty) தெரிவித்ததுடன். அவருக்கு தனது நன்றிகளையும் அகதிகள் மைய முகாமையாளர் கூறியிருந்தார்.

விடுதலையான பின்னர் வில்லியம்ஸை சந்தித்த சுகந்தன் தன்னுடைய விடுதலை காரணமாக நன்றிகளையும் அவருக்கு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரிஸ்டல் பகுதியில் உள்ள தன் நண்பர்களை பார்வையிடுவதற்காக சுகந்தன் சென்று. அங்கு மிகவும் சந்தோசமாக அவருடைய நண்பர்களுடன் சிறிது காலம் தங்கியிருந்தார் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறாக 3 வருடங்கள் பிரிஸ்டல் பகுதியில் தங்கியிருந்த பின்னர் சிவராஜா சுகந்தன், 21 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே சிவராஜா சுகந்தன் கைது செய்யப்பட்டு பிரிஸ்டல் நீதி மன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்தது. கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அஞ்சலி கொஹில் (Anjali Gohil) உண்மைகளின் அடிப்படையில் தனது சாட்சியங்களை தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் தண்டனை அறிக்கை தயாரிப்பதற்காக பீட்டர் டவ்ளர்உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி ஒத்திவைத்தார்.

நான் ஒரு தண்டனை வழங்கும் நீதிபதியாக இருக்க முடியாது என நீதவான் சுகந்தனை பார்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு 19 வருடங்கள் சிறை தண்டணை வழங்குவதே சட்டம் என்றும் நீதவான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவராஜா சுகந்தன் 37 நாட்களாக சிவராஜா சுகந்தன் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

Tags: Featured
Previous Post

ஒரு உயிரை காக்க உதவுங்கள் பரோபகாரிகளே!

Next Post

கனடாவில் குடிவரவு விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு துரித, முக்கியத்துவ சேவை (Faster Premium Services)– லிபரல் அரசு ஆலோசனை!

Next Post

கனடாவில் குடிவரவு விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு துரித, முக்கியத்துவ சேவை (Faster Premium Services)– லிபரல் அரசு ஆலோசனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures