ரொறொன்ரோ பெரும்பாகத்தின் முதலாவது பனிப்புயல்!

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் முதலாவது பனிப்புயல்!

கனடா-ரொறொன்ரோ பெரும்பாகத்தை வருடத்தின் முதலாவது பாரிய பனிப்புயல் தாக்கியுள்ளது.
நகர குழுக்களின் பூரண சுத்தப்படுத்தும் பணி தொடர்கின்றது.
ஞாயிற்றுகிழமை ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை காலை அளவில் சில பிரதேசங்களில் 15சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிக்குவியல் காணப்பட்டது.
ஒரே இரவில் தீவிரமாகிய பனிப்பொழிவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலையும் ஞாயிற்றுகிழமை இரவு பூராகவும் வாகன சாரதிகள் குளறுபடியான போக்குவரத்து நிலைமைக்கு ஆளானார்கள்.
24 மணித்தியாலங்களிற்குள் நெடுஞ்சாலைகளில் மட்டும் 400-ற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுகிழமை இரவு 8மணிக்கு ரொறொன்ரோவின் பிரதான வீதிகளில் பனி உழும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன. திங்கள்கிழழமை அதிகாலை 1-மணிவரையில் பனி உழுதல் தொடர்ந்துள்ளது.
இப்பணி திங்கள்கிழமை பூராகவும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் எண்ணிக்கையான தாமதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிவரையில் 134விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

gta10gta9gta8gta7gta6gta5gta4gta3gta2gta1gta

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News