கனடாவில் பேராபத்தை எதிர்நோக்கும் வீடற்றவர்கள்
இந்நிலையில், கடுமையான குளிரிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
எட்மன்டன் நகரிலுள்ள வீடற்ற மற்றும் தேவையை எதிர்நோக்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கான பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எட்மன்டன் அவசர நிவாரண சேவைகள் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி தேவையுடையோருக்கு இரட்டை அடுக்கு குளிர்கால ஜெக்கெட்டுகள். குளிரைத் தாங்கும் வகையிலான கம்பளி காற்சட்டைகள், காலுறைகள் வெப்ப கையுறைகள் மற்றும் போர்வைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக எட்மன்டன் அவசர நிவாரண சேவைகள் அமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
– See more at: http://www.canadamirror.com/canada/76106.html#sthash.dqRk1PaU.dpuf