ரெஜினாவில் கடந்த மாதம் காணாமல் போன பல்கலைகழக மாணவன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேக்ஸ் என அறியப்படும் சுக்வுடும் என்ற 19வயதான மாணவனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி மார்ஷல் க்ரெசண்ட் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சுக்வுடும் காணமல் போயிருந்தார்.
இதனையடுத்து அவரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர், அவர் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து எவ்வித தகவலும் தெரியாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

