Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ராயன் – விமர்சனம்

July 27, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ராயன் – விமர்சனம்

ராயன்  – விமர்சனம் 

தயாரிப்பு : சன் பிக்சர்ஸ் 

நடிகர்கள் : தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், ‘பருத்திவீரன்’ சரவணன், திலீபன் மற்றும் பலர். 

இயக்கம் :தனுஷ் 

மதிப்பீடு : 3/5

சர்வதேச நட்சத்திர நடிகராக பிரபலமான தனுஷ், ‘ப பாண்டி’ எனும் படத்திற்குப் பிறகு அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராயன்’ திரைப்படம்- ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். 

காத்தவராயன் ( தனுஷ்) – முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) – மாணிக்கவேல் ராயன்( காளிதாஸ் ஜெயராம்)- ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் பாசத்திற்குரிய தங்கை துர்கா ( துஷாரா விஜயன்). இளம் வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்ட இவர்கள் சட்ட விரோத கும்பலின் கையில் சிக்குகிறார்கள். அவர்களிடமிருந்து காத்தவராயன் தன் சகோதரர்களையும், கைக் குழந்தையான சகோதரியையும் காப்பாற்றி வாழ்வதற்காக பிறந்த மண்ணிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்கிறார்கள். வந்த இடத்தில் வாகன ஓட்டுநரான சேகர் என்பவர் ராயனுக்கு வேலையும் கொடுத்து, அவர்கள் தங்குவதற்கு உதவியும் செய்கிறார். ராயன் தன் சகோதரர்களுக்காகவும், சகோதரிகளுக்காகவும் காய்கறி சந்தையில் கடுமையாக உழைக்கத் தொடங்குகிறார். 

அந்த சென்னையில் பிரபலமான நிழல் உலக தாதாக்கள் சேது ( எஸ் ஜே சூர்யா) –  துரை ( சரவணன்) இந்த இரண்டு கோஷ்டிகளுக்கும் எப்போதும் முட்டல் மோதல்.  இதில் துரை – தனது தந்தையை வெட்டி சாய்த்து விட்டார் என்பதற்காக அவரை பலி வாங்குவதற்காக சேது சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார். 

சென்னையில் தாதாக்களின் அட்டூழியத்தை ஒழிப்பதற்காக காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் திட்டம் தீட்டுகிறார். 

காத்தவராயனின் இளைய சகோதரரான மாணிக்கவேல் ராயன் – கல்லூரியில் படிக்கும் போது, அங்கு நடைபெறும் மாணவ தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். 

காத்தவராயனின் மற்றொரு சகோதரரான முத்துவேல் ராயன் – மது அருந்துவதும், பெண்ணை காதலிப்பதும், மற்றவர்களை சீண்டுவதுமாக இருக்கிறார். 

காத்தவராயனின் தங்கை துர்கா – திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். 

துரித உணவகம் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி வரும் காத்தவராயன் – சகோதரர்கள் மீது பாசம் காட்டி, அவர்கள் எல்லை மீறாமல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார். 

இந்தத் தருணத்தில் காவல்துறை அதிகாரியான பிரகாஷ் ராஜின் சூழ்ச்சியால் ரவுடி சேதுவின் வாரிசு , ஒரு கும்பல் வன்முறையில் இறந்துவிட அந்த சிக்கலில் முத்துவேல் ராயன் சிக்கிக் கொள்கிறார். அவனை காப்பாற்றுவதற்காக காத்தவராயன் முயற்சிக்கும்போது.. எதிர்பாராத விதமாக  அவரது சகோதரர்கள் இருவரும் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். தன் தங்கையை காப்பாற்றவும்.. தனக்கு எதிராக திரும்பிய சகோதரர்களுக்காகவும் காத்தவராயன் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் இப்படத்தின் கதை. 

எக்சன் படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்ட இயக்குநர் தனுஷ் அதற்காக தெரிவு செய்த கதைக்களம் பார்வையாளர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான் என்றாலும்.. அதில் இயல்பான மற்றும் நம்பகத் தன்மை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கி படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருக்கிறார். இதற்காகவே தனுசை பாராட்டலாம். 

படத்தின் திரைக்கதை பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடியே பயணித்தாலும்.. வன்முறை அதிகமாக இருந்தாலும்… பார்வையாளர்களிடத்தில் உணர்வுபூர்வமான சகோதர பாசத்தை வலிமையாக கடத்தி இருக்கிறார். அதிலும் துர்கா கதாபாத்திரம் பிரமிப்பைத் தருகிறது. குறிப்பாக தனுஷ் உயிருக்கு போராடும் வேளையில் அவரை கொல்வதற்காக கும்பல் முயற்சிப்பதும் , அவர்களிடமிருந்து துர்கா – சேகர் ஆகிய கதாபாத்திரங்கள், ராயனை காப்பாற்ற போராடும் காட்சிகள் ரசிகர்களின் உணர்வை.. மனதை.. தொடுகிறது. அந்த சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதமும், அதனை காட்சியாக படமாக்கி இருக்கும் விதமும், அதற்கு ஏ ஆர் ரஹ்மானின் பின்னணியிசையும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. 

தனுஷ் வழக்கம்போல் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் ராயன் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார். 

அவரது சகோதரராக வரும் சந்தீப் கிஷன் நடிப்பில் சில இடங்களில் டெம்ப்ளேட்தனம் தெரிந்தாலும்.. அவருக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதலும், நடனமும் கவனிக்க வைக்கிறது. 

இளைய சகோதரராக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் பல படி முன்னேற வேண்டும் என்பதை இந்த படத்திலும் உணர்த்தி இருக்கிறார். இதனை அவரும் உணர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

துர்காவாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தி அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதிலும் இரண்டாம் பாதியில் இவரின் நடிப்பு மிரட்டல். 

காவல் அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் பெரிதாக ஏதேனும் செய்வார் என எதிர்பார்த்து இருந்தால்… மிஸ்ஸிங். ஆனால் அவர் நடிப்பு எப்போதும் போல் கிஸ்ஸிங். 

சேதுவாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா வழக்கம்போல் காட்டு கத்தல் கத்தாமல்.. இயல்பாக நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.  சேகராக நடித்திருக்கும் செல்வராகவன் திரையில் புதிதாக தோற்றமளிக்கிறார். அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கவர்கிறார். 

தனுஷின் இயக்கத்தை கடந்து… நட்சத்திர நடிகர்களின் நடிப்பை கடந்து… ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பவர்கள் இருவர். ஒருவர் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் -மற்றொருவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இந்த இருவரும் தனுசுக்கு பக்கபலமாக செயல்பட்டு படைப்பை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். 

படத்தில் எக்சன் காட்சிகள் தான் பலம் என்றால்… அதுவே பலவீனம் என்றும் குறிப்பிடலாம்.  நகைச்சுவை காட்சிகள் குறைவு. பாடல்கள் அதிலும் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் :அடங்காத அசுரன்…’ பாடல் ரசிகர்களை மெய் மறந்து கரவொலி எழுப்ப வைக்கிறது. 

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சென்டிமென்ட்டான அண்ணன் -தங்கை உறவை, எக்சன் பின்னணியில் சொல்லி இருக்கும் ராயனை தாராளமாக பட மாளிகைக்கு சென்று கண்டு ரசிக்கலாம். 

தனுஷின் இயக்கத்தை கடந்து… நட்சத்திர நடிகர்களின் நடிப்பை கடந்து… ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பவர்கள் இருவர். ஒருவர் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் -மற்றொருவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இந்த இருவரும் தனுசுக்கு பக்கபலமாக செயல்பட்டு படைப்பை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

படத்தில் எக்சன் காட்சிகள் தான் பலம் என்றால்… அதுவே பலவீனம் என்றும் குறிப்பிடலாம்.  நகைச்சுவை காட்சிகள் குறைவு. பாடல்கள் அதிலும் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் :அடங்காத அசுரன்…’ பாடல் ரசிகர்களை மெய் மறந்து கரவொலி எழுப்ப வைக்கிறது.

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சென்டிமென்ட்டான அண்ணன் -தங்கை உறவை, எக்சன் பின்னணியில் சொல்லி இருக்கும் ராயனை தாராளமாக பட மாளிகைக்கு சென்று கண்டு ரசிக்கலாம்.

ராயன் – தனுஷின் மேஜிக்.

Previous Post

இன்றைய தங்க விலைச் சுட்டெண்

Next Post

மொட்டுக் கட்சியின் இறுதித் தீர்மானம் மகிந்தவின் கையில்..

Next Post
மகிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்ல தடைவிதிக்குமாறு கோரிக்கை

மொட்டுக் கட்சியின் இறுதித் தீர்மானம் மகிந்தவின் கையில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures