கோவை ரயில் நிலையத்தில் நேற்று காலை 6-வது பிளாட்பாரத்தில் கோவையிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் 2 அடுக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, அந்த பிளாட்பாரத்தில் சுற்றிக் கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ரயில் இன்ஜின் மேல் ஏறி மேலே சென்ற மின்கம்பியை பிடித்தார்.
அதில் அவர் உடல் கருகினார். தகவலறிந்து அங்கு சென்ற ரயில்வே போலீசார் தீக்காயத்துடன் கிடந்த அந்த வாலிபரை மீட்டு ேகாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.