தேர்தலில் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க கூடிய ஒருவருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டுமென ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான உபுல் ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீண்டகாலமாக தலைமைத்துவ பதவியினை வகிக்கும் ரணில், எந்ததொரு தேர்தலிலும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை.
இவருடைய காலத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கான வாக்கு வங்கி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகையால், அதற்கான முழுப்பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும்.
மேலும் தலைமைத்துவ பதவியில் இருந்தும் ரணில் விலகுவதுடன் கட்சிக்கு வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்க கூடிய ஒருவருக்கு அதனை வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.