பணித்தடை விதிக்கப்பட்டிருந்த லெப்டினன் யோசித்த ராஜபக்ஸவுக்கு மீண்டும் கடற்படை சேவையில் இணைந்து கொண்டுள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பியல் டி சில்வா நேற்று (24) கையொப்பமிட்டுள்ளார்.
கால்டன் விளையாட்டு வலையமைப்பு (சீ.எஸ்.என்.) தொலைக்காட்சி சேவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கடற்படையினால் கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் லெப்டினன் யோசித்தவுக்கு சேவைத் தடை விதிக்கப்பட்டிருந்தது.