யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ராடர் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா யுஎஸ்எஸ் கார்னே என்ற போர்க்கப்பலில் இருந்து டொம்ஹவ்க் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்கள் உட்பட கப்பல்களை தாக்குதவற்கான ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பலத்தை அழிப்பதற்காக 12ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியே இந்த தாக்குதல்கள் என தெரிவித்துள்ள அமெரிக்கா நவம்பர் 19ம் திகதி முதல் ஈரான் சார்பு ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் 28 தடவை செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.