யன்னல் ஊடாக விழுந்த 15-மாத குழந்தை!!! குடும்பத்தினரை வருந்த வைத்த எதிர்வினை…
கனடா-வினிபெக், சிறு குழந்தை ஒன்று இரண்டாவது மாடி தொடர்மாடிக்கட்டிட யன்னல் ஒன்றினூடாக சனிக்கிழமை விழுந்துள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்து வெளியான இணையத்தள எதிர்வினை குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15-மாதங்களே ஆன எமா-கிரேஸ் யன்னல் வழியாக வெளியே விழுந்து விட்டாள்.வினிபெக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இவளது பெற்றோர்கள் கிறிஸ்ரோபர் ஜெநய்லி மற்றும் நவாடா அன்டர்சன் இருவரும் தங்கள் குழந்தை அறிவற்ற நிலையில் கீழே நடைபாதையில் கிடக்க கண்டுபிடித்தனர்.
குழந்தைக்கு மண்டையோட்டில் இரு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது.ஆனால் திடமான நிலையில் உள்ளாள். விழுந்ததில் இருந்து பெற்றோர் இருவரும் அவளின் அருகிலேயே உள்ளனர்.
இச்சம்பவம் ஒரு விபத்தென வினிபெக் பொலிசார் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை.
குழந்தையின் பேத்தியான அல்தியா குய்போச்செ தனது பேத்தி காயமடைந்தது கொடூரமானதென தெரிவித்ததோடு அவளது பெற்றோரையும் அவர்கள் எதிர்நோக்கிய கண்டனங்களிலிருந்தும் பாதுகாத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.