இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தற்போது மொனராகலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.