பலவந்தமாக கைது செய்யப்படுதல் மற்றும் ஏனைய துஸ்பிரயோகங்களில் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதன தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்21 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் இலங்கையில் அசாதாரண சூழ்நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு எதிரான சமுக வன்முறைகளும் பதிவாகி இருக்கின்றன.
இவ்வாறான வன்முறைகள் ஊக்கவிக்கப்படுவதை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.