பொபி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொபி மலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் செயலத்தில் வைத்து இவ்வாறு பொபி மலர் அணிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் இவ்வாறு முதலாவது பொபி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.
ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நினைவு தினம், பொபி வேலைத்திட்டம் மற்றும் போர் நினைவுத் தூபி அபிவிருத்தி குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் கலாநிதி ஷேமால் பெர்ணான்டோ உள்ளிட்ட இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.