இங்கிலாந்தில் உள்ள நீர்தேக்கம் ஒன்றில் மீனவர்கள் இருவர் அபாயகரமாக படகு பயணம் செய்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் டெர்பிஷைர் பகுதியில் லேடிபோவர் என்ற அணை கட்டப்பட்டுள்ளது. தொடர் மழையால் அணை நிரம்பி வழியும்போது, அதிகப்படியான நீரை அங்குள்ள டெர்வென்ட் ஆறு வழியாக வெளியேற்றுவதற்கென இரு இடங்களில் 66 அடி ஆழத்துக்கு துளையிடப்பட்டு அங்கிருந்து சுரங்கப்பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, இந்த துளை அருகே படகு சவாரி செய்தால், துளை வழியாக உள் இழுக்கப்படும் அபாயம் உள்ளது. அண்மையில் அப்பகுதியை சேர்ந்த Flo Neilson என்ற பெண் நாய்களுடன் நடைபயிற்சி சென்றபோது, மீனவர்கள் இருவர் படகில் அந்த துளை அருகே நெருங்கி செல்வதை கண்டார். ஆனால் துளை அருகே படகு நெருங்குவதை அறிந்த மீனவர்கள், சமார்த்தியமாக படகை திருப்பி அங்கிருந்து தப்பினர்.
Flo Neilson பதிவு செய்த இந்த வீடியோ காட்சி வைரலானதை தொடர்ந்து, அணைக்கு மீன் பிடிக்க வருவோர், ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.