பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவரும் தொழிலதிபர் நெஸ்வாடியாவும் தீவிரமாக காதலித்தனர். இருவரும் இணைந்து இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வாங்கினார்கள். இப்போதும் இருவரும் அந்த அணியின் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக் கொண்டனர். அது மட்டுமல்ல, நெஸ்வாபடியா மீது பரபரப்பான பாலியில் குற்றச்சாட்டுகளையும் பிரீத்தி ஜிந்தா கூறியிருந்தார்.
இந்த நிலையில் நெஸ்வாடியாவின் கோ ஏர் விமானத்தில் ப்ரீத்தி ஜிந்தா பயணம் செய்ய அந்த நிறுவனம் மறுத்த செய்தி வெளியாகி உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் அவரை பயணம் செய்ய தடுத்தது சட்டவிரோதம் என்ற குரல் எழுந்துள்ளது. இதனை விமான நிறுவனம் மறுத்திருக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
“பிரீத்தி ஜிந்தா மார்ச் 30ந் தேதி மும்பையிலிருந்து சண்டிகருக்கும், ஏப்ரல் 2ந் தேதி சண்டிகரிலிருந்து மும்பைக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். எங்கள் விமானத்தில் மார்ச் 30ந் தேதி பயணித்தார். ஆனால் ஏப்ரல் 2ந் தேதி அவர் வரவில்லை. நாங்கள் அனுமதிக்கவில்லை என்பது தவறான செய்தி” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.