சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகை நீலிமா ராணி. ராதிகாவின் ராடான் நிறுவனத்தின் ஆஸ்தான நடிகை. நடிகையாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆனார். நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரை தயாரித்தார். இந்த தொடர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது.
தற்போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற புதிய தொடரை தயாரித்து வருகிறார். இதில் விஷ்ணு ஹீரோவாகவும், கிருஷ்ணப்ரியா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என்ற வழக்கமான விஷயத்துடன் சாபம், விதி, நம்பமுடியாத மூட நம்பிக்கைகள் எனவும் பயணிக்கப்போகிறது தொடர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.