இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் பின்னர் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தனிப்பட்ட ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடாத்திய இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.