Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயம் ஸ்தாபிப்போம் – மஹிந்த

October 26, 2019
in News, Politics, World
0

மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயம் ஸ்தாபிப்போமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “92 ஆம் ஆண்டுகளில் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஒட்சிசன், பிரேமதாஸவினால் இல்லாது செய்யப்பட்டது. இதனை சிலர் மறந்து விட்டார்கள்.

நாம் விவசாயிகளுக்கு உரத்தை 350 ரூபாய்க்கு வழங்குவோம் என அன்று கூறியபோது, அது அலாவுதீனின் அற்புத விளக்கினால் மட்டுமே முடியும் என்று கூறினார்கள்.

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிவோம் என்று கூறியபோது, எந்த துடைப்பத்தால் துடைத்தெறியப்போகிறோம் என எம்மை கிண்டலடித்தார்கள். ஆனால், இந்த நாட்டில் முடியாது என நினைத்த பல விடயங்களை நாம் செய்துக்காட்டினோம்.

இதற்கு மக்கள் எம்முடன் இருந்தமைதான் பிரதான காரணமாக கருதப்படுகிறது.  இன்று மக்கள் மீண்டும் எம்மை எதிர்ப்பார்க்கிறார்கள்.

நாம் யதார்த்தமாக சிந்திப்பவர்கள். மக்களுக்கு ஒரு உறுதியை வழங்கினால் நிச்சயமாக அதனை மேற்கொள்வோம். எம்மிடம் என்றும் இரகசிய ஒப்பந்தங்கள் கிடையாது.

எந்தவொரு இனத்தையும் ஏமாற்ற நாம் தயாரில்லை. எமது கொள்கைப் பிரகடனத்தில் எந்தவொரு தரப்பினரின் ஒப்பந்தங்களும் கிடையாது.

அடுத்த சிங்கள- தமிழ் புத்தாண்டுகளுக்குள் இந்த நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் ஏற்படுத்துவோம்.

நாம் அன்று அரசாங்கத்தை இந்த தரப்பினருக்கு ஒப்படைத்துச் சென்றபோது, மக்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இவர்களுக்கு வழங்கிவிட்டுத்தான் சென்றேன்.

ஆனால், இவர்களால் மக்களுக்கான முழுப்பாதுகாப்பை வழங்க முடியாது போய்விட்டது.  ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் வந்த சிறுவர்களின் இரத்தம் சிதறடிக்கப்பட்டது.

மரண பயத்திற்கு சிறுவர்கள் முகம் கொடுத்தார்கள். பாடசாலைக்குச் செல்லவும் அஞ்சினார்கள். இதுதான் நிலைமையாகும்.

இதனால், எமக்கு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயமாக ஸ்தாபிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கருத்துக்கணிப்புக்களை நடத்துவது பாரிய குற்றம்!!

Next Post

ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா தனது துருப்புக்களை சிரியாவிற்கு அனுப்பியுள்ளது

Next Post

ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா தனது துருப்புக்களை சிரியாவிற்கு அனுப்பியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures