டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட இலங்கையர்களான மாகந்துரே மதூஸ் உட்பட சகலரையும் அந்நாட்டிலிருந்து வெளியேற்றும் போது அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முதலில் அறிவிப்பு செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
மாகந்துரே மதூஸ் டுபாய் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் இல்லையெனவும், அவ்வாறு அவர் விடுவிக்கப்படுவதாயின் அந்நாட்டிலுள்ள எமது தூதரகத்துக்கே முதலில் அறிவிக்கப்படும்.
தூதரகத்தின் ஊடாக நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு தகவல்கள் அறியவரும். மதூஸ் உட்பட எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.
கஞ்ஜிபான இம்ரான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

