மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படுத்தும் நடிகர்களில் மலையாள குணச்சித்திர நடிகர் ஜாய் மேத்யூவும் ஒருவர். சமீபத்தில் குறிப்பிட மதத்தினரை மட்டும் கிண்டலடிப்பவர்களை சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்துள்ளார் ஜாய் மேத்யூ..
“மாதா அமிர்தானந்தமயி தனது பக்தர்களை கட்டியணைத்து, அவர்களுக்கு முத்தம் கொடுத்து ஆசீர்வதிப்பதை கூட மலையாளிகள் பலர் கிண்டலடிக்கிறார்கள்.. தனது செயல் பக்தர்களுக்கு ஆசுவாசம் தரும் என்பதாலேயே அவர் இவ்வாறு செய்கிறார்..
இதே கிறித்துவ மதத்தில் கூட பாதிரியார்கள் தங்களது பக்தர்களின் பாதங்களை கழுவி சடங்குகள் செய்கிறார்கள்.. ஆனால் கிண்டலடிப்பவர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா..? ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறி வைக்கிறீர்கள்..? விமர்சித்தால் அனைத்து மதங்களின் செயல்பாடுகளையும் விமர்சியுங்கள்.. இல்லையா யாரையும் கிண்டலடிக்காமல் சும்மா இருங்கள்” என கோபமாக கூறியுள்ளார் ஜே மேத்யூ.