கடந்த ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் பல்சர் சுனில். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் போலீசார் நடிகர் திலீப்பை இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்தனர்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட நடிகை கடத்தப்பட்ட சமயத்தில் காருக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளை தான் பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சுனில்..
நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்து, சுனிலின் வக்கீல் மூலமாக ஒரு நீதிபதி முன்னிலையில் அந்த காட்சிகளை பார்க்க ஒப்புதல் அளித்தது.. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூன்-18ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது.