கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த ‘அச்சா தின்’ என்கிற படத்தை இயக்கியவர் மார்த்தாண்டன். ஆனால் அந்தோ பரிதாபம் அந்தப்படம் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் தங்கவில்லை. அதன்பின் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த மார்த்தண்டனுக்கு தற்போது படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் குஞ்சாக்கோ போபன்..
ஆனால் குஞ்சாக்கோ ஒப்புக்கொண்டது வெறும் மார்த்தாண்டனுக்காக அல்ல.. சூப்பர்ஹிட் படமான ‘வெள்ளிமூங்கா’ படத்தின் கதையை எழுதிய ஜோசி தாமஸ் தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார். அந்தவிதத்தில் கதை குஞ்சாக்கோவை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம். படத்திற்கு ‘ஜானி ஜானி எஸ் அப்பா’ என பெயர் வைத்துள்ளார்கள்.